Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்த மகாகாந்தி!

05 டிச, 2021 - 15:51 IST
எழுத்தின் அளவு:
MahaGandhi-files-criminal-defamation-case-against-Vijay-Sethupathi

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகாகாந்தி என்பவர், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த நவம்பர் 2-ந்தேதி அன்று இரவு நடிகர் விஜய்சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை சொல்லி பாராட்டினேன். ஆனால் அந்த வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய்சேதுபதி பொதுவெளியில் என்னை இழிவாக பேசினார். எனது சாதியை தவறாக பேசினார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறியபோது அவரது மேலாளர் ஜான்சன் என்னை தாக்கினார். அப்போது எனது காதில் அறைந்தார். இதனால் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தநாள், விஜய்சேதுபதியை நான் தாக்கியது போன்று அவர் தரப்பில் அவதூறு செய்தி பரப்பினார்கள்.
எனவே சினிமாத்துறையில் இருக்கும் ஒரு நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கியதோடு அவதூறு பரப்பிய குற்றத்திற்காக விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இந்த வாரமே நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் - அபர்ணாதாஸ் கொடுத்த அப்டேட்!விரைவில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் ... ராம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு! ராம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
08 டிச, 2021 - 09:48 Report Abuse
Sridhar சேதுபதி இது ஒரு நாடா என்று கேட்டுருந்தால், அவனை உள்ளே வைத்து லாடம் கட்டவேண்டும். அவன் பசும்பொன் தேவர் அய்யாவை பற்றி தவறாக பேசியிருந்தால், வெளியே வைத்தே லாடம் கட்டவேண்டும். என்னும் ஏன் உசிலம்பட்டி காரர்கள் சும்மா இருக்கிறார்கள் என்று புரியவில்லை? தேவரை பற்றி இப்படி தைரியமாக அவதூறு பேசும் துணிவு அந்த கன்னட நாயகனுக்கே இருந்ததில்லை
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08 டிச, 2021 - 04:43 Report Abuse
J.V. Iyer விஜய் சேதுபத்தியை தப்பிக்க விடக்கூடாது. சட்டம் தன்கடமையை செய்யவேண்டும். இது விடியாமூஞ்சி ஆட்சியில் சாத்தியமா?
Rate this:
R.VENKATESAN - Madurai,இந்தியா
06 டிச, 2021 - 17:52 Report Abuse
R.VENKATESAN உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை ம்
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
05 டிச, 2021 - 20:06 Report Abuse
vira இவன் ஒரு திருட்டு பையன் மத வெறி புடிச்சவன்
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
05 டிச, 2021 - 19:15 Report Abuse
John Miller மூடி கொண்டு போக்கால் இவனை யார் வாழ்த்து தெரிவிக்க சொன்னார்கள். கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது இதை உடனே விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? இதே அவசரத்தை அப்பாவு, கிரானைட் வழக்குகளில் காட்டுவார்களா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in