'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
மனு ஆனந்த் எழுதி இயக்கிய எப்.ஐ.ஆர் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படம் ஓ.டி.டி.,யில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அதை மறுத்த படக்குழு தற்போது வரும் 2022 பிப்ரவரியில் தியேட்டரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் வெளியிடும் தேதியை கூறவில்லை. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாகிறது.