தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நுழைந்து பிசியாக நடித்து வரும் சில நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தனது உடற்பயிற்சி, சுற்றுலா, படப்பிடிப்பு உள்ளிட்ட தன்னை பற்றிய பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். படங்களில் நடிக்கும் நேரங்கள் தவிர்த்து மீதி நேரங்களில் புத்தகம் படிப்பதற்கு செலவிடும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் சல்லி ரூனே என்கிற எழுத்தாளர் எழுதிய நார்மல் பீப்பிள் என்கிற நாவலை வாசித்துள்ளார்.
அந்த நாவல் குறித்து அவர் கூறும்போது, “ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது இந்தப்புத்தகம் உங்கள் இதயத்தை உடைத்து விடும். குறைபாடுள்ள கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான எதிர்மறை கதாபாத்திரங்கள்.. வாவ்” என கூறியுள்ளார். ஆனால் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் சோகமாகி விட்டார் பூஜா ஹெக்டே. புத்தகத்தை கையில் வைத்தபடி சோகமாக படுத்திருக்கும் தனது புகைப்படத்தையும் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.