இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்ஆர்ஆர் என்கிற படத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப்படத்தில் கிட்டத்தட்ட அவரது வேலைகள் நிறைவடையும் கட்டத்துக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் புதிய பட அறிவிப்பு உகாதி திருநாளான இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் ஜனதா கேரேஜ் என்கிற படத்தில் இணைந்து வெற்றியை கொடுத்தவர்கள் தான்.. தற்போது சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்தை இயக்கி வரும் கொரட்டாலா சிவா அதை முடித்ததும் ஜூனியர் என்டிஆர் படத்தை துவங்குகிறார்.
கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் இந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும், படப்பிடிப்பு முடிந்தாலும் எப்போது ரிலீசாகும் என நிச்சயமாக சொல்ல முடியாத சூழ்நிலையில், 2022 ஏப்ரல் 29ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என முன்கூட்டியே ரிலீஸ் தேதியையும் அறிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது பட தயாரிப்பு நிறுவனம்