இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
ரிலீஸுக்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளாகும் படங்கள், அந்த சுமையினாலேயே பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறும் நிகழ்வுகள் சினிமாவில் அதிகம் நிகழ்வதுண்டு. மலையாளத்தில் வெளியான மோகன்லால் நடித்த 'ஒடியன்' படமும் அப்படித்தான். மிக பிரமாண்டமாக உருவான இந்தப்படம் மோகன்லாலின் புலி முருகன் படத்திற்கு பிறகு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
ஆனால் அறிமுக இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இதை சரியாக ரசிகர்களுக்கு கொண்டுசெல்ல தவறிவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். சமீபத்தில் படம் ரிலீஸாவதற்கு முன் ஒரு பேட்டியில் மோகன்லால் பேசியபோது, “இந்தப்படத்தில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் என எல்லா அம்சங்களும் இருகின்றன. ஆனால் இது ஒரு பாவம் படம்.. மிகப்பெரிய மேஜிக் எல்லாம் இல்லை. வழக்கமான ஒரு கிராமத்தை பற்றிய கதை தான்” என கூறியிருந்தார்.. ஆனால் அவர் தன்னடக்கத்துடன் சொல்கிறார் என நினைத்தவர்களுக்கு, படம் பார்த்தபின்னர் தான், அவர் சூசகமாக படத்தை பற்றி சொன்னதே புரியவந்ததாம்.