இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விக்ரம் வேதா, ஸ்கெட்ச் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மலையாள நடிகர் ஹரீஷ் பெராடி. சமூக, மற்றும் அரசியல் விஷயங்களில் அவ்வப்போது துணிச்சலாக, அதேசமயம் நையாண்டியுடன் கருத்து சொல்வதிலும் வல்லவர். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து கேரளாவில் ஒரு கட்சியினர் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
இதை குறிப்பிட்டு பேசியுள்ள நடிகர் ஹரீஷ் பெராடி, “இந்த பந்த்தினால் எதிர்பாராமல் பயண வழியில் சாப்பிட எதுவும் கிடைக்காமல் மாட்டிக்கொண்டவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். வழக்கம்போல பந்த் அன்று பால் மற்றும் செய்தித்தாள்கள் விநியோகம் பாதிக்கப்படாது. அதனால் முதலில் பாலை வாங்கி, கிடைக்கும் ஏதாவது ஒரு செய்தித்தாளை அதில் தொட்டு சாப்பிடுங்கள்.. பசி ஆறிவிடும்” என கிண்டலாக கருத்து கூறியுள்ளார்.