டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குறுகிய காலத்திலேயே தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு தனியிடத்தை பிடித்தவர் தெலுங்கு இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா. அனைவரிடமும் வயது வித்தியாசம் பார்க்காமல் கலகலப்பாக பழகும் இவரது சுபாவமே இவர் நடித்து சமீபத்தில் வெளியான டாக்ஸிவாலா படக்குழுவினரை சங்கடப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
'டாக்ஸிவாலா' படம் ஹிட்டானதை தொடர்ந்து உடனடியாக சக்சஸ் மீட் நடத்தினார்கள் அதன் படக்குழுவினர். இந்த நிகழ்வில் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் கலந்து கொண்டார். அனைவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது விஜய் தேவரகொண்டா தனது அருகில் நின்ற அல்லு அரவிந்த்தின் தோள்மீது கையை போட்டபடி போஸ் கொடுத்தார்.
அவ்வளவு பெரிய சீனியர், அவரது வயதுக்கான மரியாதை கூட தராமல் விஜய் தேவரகொண்டா இப்படி அவர் தோள்மீது கை போடலாமா என படக்குழுவினர் அப்செட் ஆனார்களாம். இதுகுறித்து சிலர் வெளிப்படையாகவே விஜய் தேவரகொண்டாவிடம் கூறவும் செய்தார்களாம். ஆனால் அவரோ, “அல்லு அரவிந்த் சார் எனக்கு தந்தை போன்றவர். அந்த பாசத்தின் உரிமையில் தான் நான் அவர் தோளில் கை போட்டேன். இது ஏதேச்சையாக நடந்த ஒன்று” என அவர்களை சமாதானப்படுத்தினாராம்.