தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் 'பிரேமம்' படம் மூலம் புகழ்பெற்ற சாய் பல்லவி தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்துள்ள 'பாடி பாடி லெச்சே மனசு' என்கிற படம், வரும் டிச-2௦ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த நேரத்தில், தயாரிப்பாளரிடம் சாய் பல்லவி அதிக பணம் கேட்டு அடம்பிடித்தார் என்கிற செய்தி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹனு ராகவபுடி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தை எடுத்து முடித்து எடிட் பண்ணிய பிறகு இன்னும் சில காட்சிகளை எடுத்து இணைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்த இயக்குனர், சாய் பல்லவியை அழைத்து விஷயத்தை கூறினாராம். சாய் பல்லவியும் அவர்கள் கேட்ட இரண்டு தேதிகளை தந்து நடித்தும் கொடுத்தாராம்.
இயக்குனரோ அதற்கடுத்தும் இன்னும் கொஞ்சம் மாற்றம் செய்யவேண்டும் என கூறி மீண்டும் தேதி கேட்டு சாய் பல்லவியிடம் கோரிக்கை வைத்தாராம். ஆனால், சாய் பல்லவியோ அதற்கு தனியாக சம்பளம் கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என கறாராக கூறிவிட்டாராம். ரிலீஸ் தேதி வேறு நெருங்கி விட்டதால் வேறு வழியின்றி அவர் கேட்ட தொகையை கொடுத்து அவரை வைத்து மீண்டும் காட்சிகளை படமாக்கினார்களாம்.