பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் சுசீந்திரனை போல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் மாறிவிட்டார் என்றே தெரிகிறது.. ஆம்.. சுசீந்திரன் தற்போது ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் என மூன்று படங்களை அடுத்தடுத்து விரைவாக இயக்கி முடித்துவிட்டார்.
இதே பாணியில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிந்தியில் இம்ரான் ஹாஸ்மி, வேதிகாவை வைத்து தான் இயக்கிவந்த 'பாடி' என்கிற படத்தை 39 நாட்களில் முடித்தார். அந்தப்படம் முடித்த கையோடு மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க ஆரம்பித்தார்.
கடந்த செப்-1௦ஆம் தேதி துவங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெறும் 42 நாட்களிலேயே முடிவடைந்து விட்டது. இதை தொடர்ந்து மீண்டும் தமிழுக்கு வரும் ஜீத்து ஜோசப், நடிகர் கார்த்தியை தனது அடுத்த படத்தில் இயக்கவுள்ளார்.