அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கேரளாவை சேர்ந்த எம்.எஸ்.பிரவீன் என்பவர் துல்கர் சல்மானின் தீவிர ரசிகர். பெருமூளை வாதம் என்கிற நோயால் பாதிக்கப்பட்ட இவர், நீண்டநாட்களாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். மேலும் அருகில் உள்ள இடத்திற்கு கூட சென்றுவர கூட இன்னொருவர் உதவியை நாடும் நிலையில் இருந்தார்.
இவரை பற்றிய தகவல் ரசிகர் மன்றத்தின் மூலமாக துல்கர் சல்மானின் கவனத்துக்கு சென்றது. இதை தொடர்ந்து தனது சொந்த செலவில் எலெக்ட்ரானிக் வில் சேர் ஒன்றை வாங்கி, தானே நேரடியாக பிரவீனை சந்தித்து வழங்கி அவரை நெகிழச்செய்துள்ளார் துல்கர் சல்மான்.