'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார் என்கிற காரணத்திற்காக மலையாள நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கவேண்டும் என சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் மலையாள நடிகர் சங்கத்தை கடுமையாக நிர்ப்பந்தித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, நடிகர் சங்கத்திற்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன்லால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் ராஜினமா செய்துவிட்டார் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேச தன்னை வந்து சந்திக்குமாறு திலீப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தன்னை வந்து சந்தித்தபோது திலீப்பிடம் ராஜினமா செய்யும்படி தான் வலியுறுத்தியதாகவும், திலீப்பும் எந்த மறுபேச்சும் இல்லாமல் ராஜினமா கடிதம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார் மோகன்லால்.
திலீப் அவராகவே ராஜினமா செய்ததாக நடிகர் சித்திக் கூறியிருந்தாரே என நிருபர்கள் மோகன்லாலிடம் கேள்வி எழுப்ப, “நான் என்ன செய்தேனோ அதைத்தான் நான் சொல்கிறேன். நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள்.. இல்லை உங்களுக்கு எது நம்பிக்கையாக தெரிகிறதோ அதையே நம்புங்கள்” என கோபமாக கூறினாராம் மோகன்லால்.