இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா, திடீரென மரணம் அடைந்தார். கல்பனாவிற்குப்பின் அவரது மகள் ஸ்ரீமயிக்கு, அவரது சித்தி ஊர்வசியும், பெரியம்மா கலாரஞ்சனியும் தான் ஆதரவாக இருந்து வருகிறார்கள்..
இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் அப்போதே கிளம்ப, அதை ஊர்வசி மறுத்து வந்தார். அதன்பின் ஸ்ரீமயி தனது பெயரை ஸ்ரீசங்க்யா என மாற்றிக்கொண்டு 'குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ஆனால் மேற்கொண்டு அந்தப்படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்தநிலையில் கல்பனாவின் மகள் ஸ்ரீமயி, தான் 'மோலிக்குட்டியின் சுயம்வரம்' என்கிற புதிய படம் ஒன்றில் அறிமுகமாகி நடித்து வருவதாகவும், அந்தப்படத்தை பஷிலி கபீர் என்பவர் இயக்குவதாகவும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் தனது தாய்க்கு தந்த ஆதரவை தனக்கும் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீமயி.