‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஒரு திரைப்படம் ஒரே தியேட்டரில் 24 மணிநேரமும் அடுத்தடுத்த காட்சிகளாக திரையிடப்பட்டால் அது மூவி மராத்தான் என்று அழைக்கப்படும். இந்த நடைமுறை ஹாலிவுட்டில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் முதன் முறையாக நிவன்பாலி, மோகன்லால் நடித்துள்ள காயங்குளம் கொச்சுன்னி என்ற மலையாளப்படத்தின் மூலம் இந்தியாவுக்கு வருகிறது. படத்தை தயாரித்துள்ள ஸ்ரீகோகுலம் மூவீஸ் நிறுவனம் இந்தியாவின் பிரபல மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான கார்னிவெல் சினிமாசுடன் இணைந்து இதனை வெளியிடுகிறது.
அதன்படி இந்தியா முழுக்க 19 மல்டி பிளக்ஸ் காம்ப்ளக்கில் உள்ள 52 தியேட்டர்களில் சுமார் 200 காட்சிகள் அடுத்தடுத்து திரையிடப்பட இருக்கிறது. படம் வருகிற 11ந் தேதி வெளிவருகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீகோகுலம் மூவீஸ் கோபாலன் கூறியதாவது:
ஒரு தயாரிப்பாளராக என்னுடைய திரைப்படம் அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, எங்கள் படம் இந்தியாவின் முதல் மூவி மராத்தான் என்று அழைக்கப்படுவதை விட வேறு என்ன சந்தோஷம் வேண்டும். ஒரு பிரமாண்டமான அனுபவத்தை கொடுக்க கார்னிவல் சினிமாஸ் முன் வந்திருக்கிறது.
நாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வழங்க இருக்கிறது. தங்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்தோடு செயல்படாமல், புதுமையான மற்றும் தனித்துவமான ஐடியாக்களை முன்னெடுத்து செல்வதில் முன்னோடியான அத்தகைய ஒரு மிகப்பெரிய பிராண்டுடன் இணைந்து செயல்படுவது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த ஒரு பாக்கியம். என்றார்.