புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பேராயர் பிராங்கோ மூலக்ல் கைது செய்யப்பட்டிருக்கிறார். உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு கிறிஸ்தவ பேராயர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இது கேரளா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும், பேராயருக்கு எதிராகவும் கேரளாவில் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரபல மலையாள குணசித்ர நடிகர் ஜோய் மேத்யூ தலைமையில் நேற்று மிட்டாயி இரவு பகுதியில் கண்டன பேரணி நடத்தினர்.
இந்த பகுதியில் ஊர்வலம், பேரணிக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். அதையும் மீறி ஜோய் மேத்யூ பேரணி நடத்தியதால் அவர் உள்ளட 24 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
"போலீசார் பேராயருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள். அதனால்தான் தடை பற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் இப்போது வழக்கு போட்டிருக்கிறார்கள். வழக்கை சட்டப்படி சந்திப்போம்" என்கிறார் ஜோய் மேத்யூ.