சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ், ரஹ்மான் நடிப்பில் ரணம் என்கிற படம் வெளியானது.. நிர்மல் சஹாதேவ் என்பவர் இயக்கிய இந்தப்படம் வெளிநாட்டு கேங்ஸ்டர் சண்டையை பின்னணியாக கொண்டு உருவாகி இருந்ததால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை..
இந்தப்படம் வெளியான ஒருவாரம் கழித்து ஒரு பேட்டியில் பிருத்விராஜ் பேசியபோது, "சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை அடைவது எனது நோக்கமல்ல.. கூடே மாதிரி படம் ஓடும் என்பது தெரியும்.. ரணம் மாதிரியான படங்கள் சரியாக போகாது என தெரியும். அதனால் வெற்றி தோல்வி பற்றி கவலைப்பட கூடாது. பரிசோதனை முயற்சியாக வித்தியாசமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை" என கூறியுள்ளார்.
பிருத்விராஜின் இந்த பேச்சு ரணம் பட தயாரிப்பாளர்களில் ஒருவரான பிஜூ தாமஸை ரொம்பவே காயப்படுத்தி விட்டது. இதுகுறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள பிஜூ தாமஸ், "ஒரு படம் தியேட்டர்களில் ஒடிக்கொண்டு இருக்கும்போதே, அது சரியாக போகவில்லை என பிருத்விராஜ் சொல்லியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் சோதனை முயற்சியாக வித்தியாசமான படங்களில் நடிக்கவேண்டும் என்றால் தனது சொந்த பணத்தில் நடிக்கவேண்டும் தவிர தயாரிப்பாளர் காசை காரியாக்க கூடாது" என காட்டமாக கூறியுள்ளார்.