தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். தமிழில் ஒரு பக்க கதை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் இதுவரை வெளிவரவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்து வெளிவந்த மீன் குழம்பும் மண்பானையும் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது 5 மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து சந்தோஷன் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து சந்தோஷ் சிவன் கூறியிருப்பதாவது: மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்து கொடுத்து விட்டேன். அடுத்து மலையாளத்தில் படம் இயக்குகிறேன். இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படம். இந்தியாவின் முன்னணி டெக்னீஷியன்கள் இதில் பணியாற்ற இருக்கிறார்கள். காளிதாஸ், மஞ்சுவாரியார் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஷோபின் ஷாகிர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அக்டோபர் 20ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.