விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் ஹீரோவாக அறிமுகமான ஒரு பக்க கதை படம் இன்னும் ரிலீஸாகவில்லை.. அதற்கடுத்து நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படமும் தமிழில் அவருக்கு வரவேற்பு தரவில்லை. இந்தநிலையில் தனது சொந்த ஊரான மலையாளத்திலேயே காலூன்றலாம் என பூமரம் என்கிற படத்தில் நடித்தார் காளிதாஸ் ஜெயராம்..
இந்தப்படம் வெளியாக தாமதனானாலும் வெளியான பின் காளிதாஸின் நடிப்புக்கு பாராட்டு தேடித் தந்தது. அதன் பலனாக ஜீத்து ஜோசப், அல்போன்ஸ் புத்ரன் மற்றும் கார்த்திக் நரேன் என முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் காளிதாஸ்..
இந்தநிலையில் ஜெயசூர்யாவை வைத்து ஆடு, ஆடு-2 ஆகிய படங்களை இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் டைரக்சனில் அர்ஜென்டினா பேன்ஸ் கொட்டாரக்கடவு என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தவகையில் பூமரம் படத்தை தொடர்ந்து காளிதாஸின் வாழ்க்கையில் வசந்தம் வீச தொடங்கியுள்ளது என்று சொல்லலாம்.