மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா அரசு விருது வழங்கும் விழாவில் மோகன்லால் பங்கேற்க கூடாதது என விருதுக்கு தேர்வானவர்கள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.. ஆனாலும் கேரளா அரசு மோகன்லாலை அழைத்தது.. மோகன்லாலுடன் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில் கலந்துகொண்டு விருதுபெற்ற தீபேஷ் என்கிற இயக்குனர் மேடையேறி முதல்வரின் கையால் விருது பெற்றார். இவரும் அந்த எதிர்ப்பாளர்களின் ஒருவர் என்பதால் முதல்வர் அருகில் நின்றிருந்த மோகன்லாலிடம் ஒரு மரியாதைக்கு கூட கைகுலுக்கவில்லை.. மோகன்லால் நிற்பதையே இவர் கண்டுகொள்ளவில்லை.
அத்துடன் விட்டாரா..? தனது முகநூல் பக்கத்தில் "பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட யாரையும் நன் கட்டிப்பிடிக்கவோ கைகுலுக்கவோ விரும்பவில்லை.. அது கடவுளாக இருந்தாலும் கூட" என ஒரு பதிவும் இட்டுளார்.
இந்த இரண்டு செயல்களும் மோகன்லாலின் ரசிகர்களின் கோபத்தை தூண்டவே, சோஷியல் மீடியாவில் தீபேஷை வசைபாடி தீர்த்துவிட்டார்கள். இப்போது அவர்கள் மீது சைபர் க்ரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார் தீபேஷ்.