டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த வருடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் செய்யப்பட்டு மூன்றுமாத சிறைவாசத்திற்குப்பின் ஜாமினில் விடுதலையானார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் ஒரு பகுதியாக சில வேலைகளை செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நடிகை கடத்தப்பட்ட சமயத்தில் காருக்குள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஆராய தனக்கு ஒரு வீடியோ பிரதி தருமாறு கடந்த பிப்ரவரி மாதம் அங்கமாலி நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தார்.
ஆனால் நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது. அதேசமயம் வீடியோக்கள் தவிர மற்ற சில ஆதாரங்களின் பிரதியை திலீப்பிற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து கேரளா உயர்நீதிமன்றத்தில் திலீப் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இதற்கு முன்னதாக அங்காமலி நீதிமன்றம் கூறிய அதே கருத்தை மேற்கோள் கட்டி திலீப்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதுபோக இன்னொரு பக்கம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என திலீப் கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.