பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கேரளாவில் இதுவரை நடிகர் மம்முட்டி மற்றும் மஞ்சு வாரியர் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளனர். மற்ற திரையுலக பிரபலங்கள் நேரில் சொல்லாவிட்டாலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள். தற்போது நடிகர் ஜெயசூர்யாவும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
எர்ணாகுளம் மற்றும் ஆலுவா பகுதிகளில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்ற ஜெயசூர்யா அரிசி, உட்பட சில அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் இதுபற்றி அவர்கூறும்போது, இன்னும் 10-15 நாட்களில் நிலைமை ஓரளவு சரியாகிவிடும்.. அதன்பின் மீடியாக்கள் இவர்களை மறந்துவிட்டு அடுத்த வேலைகளுக்கு சென்று விடுவார். அப்போது இவர்களுக்கு இன்னும் உதவி தேவைப்படும்.. அந்தசமயத்தில் மீண்டும் மக்களுக்காக நேரில் வருவேன்" என கூறியுள்ளார் ஜெயசூர்யா.