'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் மலையாளத்தில் மோகனலோரால் நடித்த நீராளி என்கிற படம் வெளியானது. தமிழில் உதயநிதி நடித்த இப்படை வெல்லும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சந்தோஷ் டி குருவில்லா என்பவர் தான் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப்படம் குறித்தும் தன்னை பற்றியும் சோஷியல் மீடியாவில் தவறான செய்திகளை பரப்புவர்களை எச்சரித்துள்ளார் குருவில்லா.
விஷயம் இதுதான்.. சந்தோஷ் குருவில்லாவின் தந்தை இந்தியன் பெந்தகொஸ்தே சபையின் பொருளாளராக பொறுப்பு வகிக்கிறார்.. அதை பயன்படுத்திதான் குருவில்லா தற்போது படம் தயாரித்து வருகிறார் என்று சிலர் சோஷியல் மீடியாவில் கொளுத்தி போட்டுவிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பரவி வரும் இந்த செய்தியை பரப்பியவர்களை கண்டித்துள்ள குருவில்லா, தன் தந்தை பொருளாளர் ஆவதற்கு முன்பே தான் நான்கு படங்களை தயாரித்துள்ளதாகவும், அப்போதிருந்தே வெற்றிகரமான ஒரு பிசினஸ்மேன் ஆக தான் இருந்து வருவதாகவும் தனது முகநூல் பக்கத்தில் கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.