ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் மை ஸ்டோரி மற்றும் கூடே என இரண்டு படங்கள் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகின.. இதில் இரண்டாவதாக வெளியான கூடே படம் ஓரளவு வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்தப்படத்தை பெங்களூர் டேய்ஸ் புகழ் அஞ்சலி மேனன் இயக்கியுள்ளார். அதே சமயம் ரோஷினி தினகர் என்பவர் இயக்கிய மை ஸ்டோரி படமோ ஒரு வாரமே முடிந்த நிலையில் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் பிருத்விராஜ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"இந்த இரண்டு படங்களிலும் பார்வதி தான் கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டையுமே பெண் இயக்குனர்கள் தான் இயக்கியுள்ளனர். இந்த ஒற்றுமை நிச்சயம் ஏதோ ஒரு படத்தை பாதிக்கவே செய்யும். அதனால் மை ஸ்டோரி படத்தை கொஞ்ச நாள் தள்ளி ரிலீஸ் செய்யலாம் என படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ரோஷினியிடம் கூறினேன். ஆனால் அவரோ, தான் ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தான் படத்தை ரிலீஸ் செய்வேன் என பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வது, படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வது என் கையில் இல்லையே" என கூறியுள்ளார் பிருத்விராஜ்.
மலையாள சினிமாவை பொறுத்தவரை அங்குள்ள முன்னணி நடிகர்கள் கூட தங்கள் படத்தின் ரிலீஸ் தேதியில் தலையிட முடியாது. இப்போதும் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வசம் தான் ரிலீஸ் தேதி முடிவெடுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..