பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் (AMMA) தற்போது நடிகர் திலீப் பிரச்சனையால் கலகலத்து போயுள்ளது.. நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறைசென்ற அவரை எப்படி மீண்டும் சங்கத்தில் சேர்க்கலாம் என ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன்,கீத்து மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்திலிருந்து விலகியுள்ளனர். இந்தநிலையில் நடிகை அனுமோல் என்பவரும் நடிகர்சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.
இவர் மலையாளி என்றாலும் அறிமுகமானது தமிழில் தான். தமிழில் திலகர் மற்றும் ஒருநாள் இரவில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன்பின் மலையாளத்திலேயே செட்டிலாகிவிட்ட இவர், மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விலகியபின் தற்போது சுதந்திரமாக உணர்வதாக கூறினாலும் இவர் விலகியதற்கான காரணம் திலீப் பிரச்சனை இல்லையாம்.
"நடிகர் சங்கத்தில் இருக்கும்போது வெவ்வேறு இடங்களில் இருந்து உத்தரவுகள் வந்தன. நான் யாருடன் நடிக்க விரும்பவில்லையோ, யார் படத்தில் பணியாற்ற விரும்பவில்லையா அவர்களுடன் இணைந்து வேலைபார்க்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன். அதனால்தான் சங்கத்தில் இருந்து விலகியுள்ளேன். இப்போது நான் நடிகர்சங்கத்திலும் இல்லை.. அதற்கு எதிராக குரல்கொடுத்து வரும் சினிமா பெண்கள் நல அமைப்பிலும் சேர விரும்பவில்லை" என காரணம் கூறியுள்ளார் அனுமோல்.