'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. கடந்த 15 ஆண்டுகளாக தலைவராக இருந்த இன்னோசென்ட் வயது முதுமை காரணமாக இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே தலைவர் பதவிக்கு மோகன்லால் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நிர்வாகிகள் வருமாறு:
துணை தலைவராக நடிகர் முகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார், பொதுச்செயலாளராக இடைவேளை பாபு, துணை செயலாளராக சித்திக், பொருளாளராக ஜெகதீஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று நடந்த பொதுக்குழுவில் இது முறைப்படி அறிவிக்கப்பட்டது. அதோடு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப் சங்கத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்தார். அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.