டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடிகர் ஜெயசூர்யா திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயசூர்யாவை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் இயக்குனரான ரஞ்சித் சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஜெயசூர்யாவின் திருநங்கை கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தநிலையில் திருநங்கைகள் சிலருடன் கொச்சியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் ஜெயசூர்யா. அப்போது உடன் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த சுல்பி மெஹர்ஜான் என்கிற திருநங்கைக்கு ஜெயசூர்யா கவுன்சிலிங் கொடுத்தார் முடிவில் அந்த திருநங்கை பெண்ணாக மாற பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்தார். அவரது இந்த முடிவிற்கு மனப்பூர்வமாக சம்மதிப்பதாக அவருடைய பெற்றோர்களும் தங்கள் ஆதரவை ஜெயசூர்யாவிடம் தெரிவித்தார்கள்.