ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் மலையாளத்தில் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரையும் கவர்ந்தவராக மாறியுள்ளார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்ய லட்சுமி, அந்தப்படத்தை தொடர்ந்து 'மாயநதி' படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிலிம்பேர் விருது, கேரள அரசு விருது உட்பட சுமார் எட்டு விருதுகள் வரை வாங்கியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி. மேலும் இந்த இரண்டு படங்களும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றதுடன் நூறாவது நாள் விழாவையும் கொண்டாடின. தற்போது பஹத் பாசில் ஜோடியாக நடித்துவரும் ஐஸ்வர்ய லட்சுமி ராசியான நடிகையாக மாறியுள்ளார்.