டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர்களில் பிருத்விராஜை பொறுத்தவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது ரசிகர்களிடம் பந்தா காட்ட மாட்டார். அந்த நேரத்தில் அரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் அவர்கள் கோரிக்கைகளையும் அந்த நேரத்தில் நிறைவேற்றவும் செய்வார்.
அப்படித்தான் சமீபத்தில் கேரளாவில் சாலக்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிருத்விராஜ். அது மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சொந்த ஊர் வேறு. அங்கிருந்த ரசிகர்கள் பிருத்விராஜை ஒரு பாடல் பாடும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அதற்கு பிருத்விராஜ் “பாடலா..? அதுவும் மணி சேட்டன் ஊரிலே நான் பாடுவதா..? அவ்வளவுதான் அந்த கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டார்” என ஜகா வாங்கினார். ஆனாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை என தெரிந்ததும் தான் நடித்த 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தாராம் பிருத்விராஜ்.