தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு கேரளாவில் ரசிகர்களிடம் எத்தகைய செல்வாக்கு இருந்தது என கடந்த ஆகஸ்ட் மாதம் நிரூபணமானது. கொச்சியில் முக்கியமான சாலையான எம்.ஜி.ரோட்டில் அமைந்துள்ள செல்போன் ஷோரூமை திறந்து வைக்க வந்திருந்த சன்னி லியோனைக்காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.
கேரளா ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்பை கண்டு திகைத்து போன சன்னி லியோன் மீண்டும் கேரளாவுக்கு விரைவில் வருவேன் என சொல்லிவிட்டு போனார். அவர் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அப்படி சொல்லியிருந்தாலும் தற்போது உண்மையிலேயே கேரளாவுக்கு வருகை தர இருக்கிறார் சன்னி லியோன்.
வரும் மே-26-ஆம் தேதி கேரளாவில் நடைபெற்ற டான்ஸ் மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாட இருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் தொடர் நடனமாக நடைபெறும் இந்த நிகழ்சியில் சன்னி லியோன், நடிகை பூர்ணா, பிரேமம் புகழ் பாரிஸ் லட்சுமி உட்பட 25௦ நடன கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.