இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம், தமிழில் '8 தோட்டாக்கள்' படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அபர்ணா பாலமுரளி. தற்போது 'காமுகி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பார்வை சவால் கொண்ட கதாநாயகனுக்கும் அவனை விரட்டி விரட்டி காதலிக்கும் இளமங்கைக்குமான காதல் தான் இந்த காமுகி படம்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக 'இதிகாசா' என்கிற படத்தை இயக்கிய பினு என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் தயாரிப்பதற்கு எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லையாம். அதுபோல இதில் நடிப்பதற்கு சில ஹீரோக்களும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிப்போனார்களாம்.
இதுகுறித்து கூறியுள்ள அபர்ணா பாலமுரளி, “மலையாள சினிமாவில் பெண்களை மையப்படுத்திய கதைகள் என்றால் பாரபட்சம் காட்டுவது இப்போதும் கூட தொடர்கிறது.. மிகுந்த வலி, போராட்டங்களுடன் தான் இந்தப்படத்தை முடித்தோம்” என தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.