தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை அமலாபால், அவரை தொடர்ந்து நடிகர் பஹத் பாசில், நடிகரும் எம்.பியுமான சுரேஷ்கோபி உள்ளிட்ட பலர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த தங்களது சொகுசு கார்களை கேரளாவில் பதிவு செய்யாமல் புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு மோசடி செய்த விஷயம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் நடிகை அமலாபால், பஹத் பாசில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் தான், இத்தாலியில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பில், தான் புதிதாக இறக்குமதி செய்துள்ள ஸ்போர்ட்ஸ் மாடல் லம்பார்க்கினி காரை கேரளாவிலேயே பதிவு செய்து அசத்தியுள்ளார் நடிகர் பிருத்விராஜ்.
இதை கேரளாவில் பதிவு செய்வதற்காக சுமார் 43.16 லட்ச ரூபாயை வரியாக செலுத்தியுள்ளார் பிருத்விராஜ். கேரளாவின் காக்கநாடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.