பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் பிளஸ்சி. நம்ம ஊர் பாலா மாதிரி என வைத்துக் கொள்ளுங்கள். இவர் தற்போது பிருத்விராஜை வைத்து 'ஆடுஜீவிதம்' என்கிற படத்தை இயக்கவுள்ளார். அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒரு இளைஞனின் பரிதாப வாழக்கையும் அங்கிருந்து தப்பிக்க துடிக்கும் அவனது போராட்டமும் தான் படத்தின் கதை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தின் கதாநாயகியாக, பிருத்விராஜின் மனைவியாக அமலாபால் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அமலாபாலை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்ய காரணம் என்ன ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் பிளஸ்சி..
“அமலாபால் தான் எனது 'சைனு' கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார். அவரால் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக மலையாளத்தில் 'மிலி' படம் தவிர மற்ற படங்களில் எல்லாம் அவரது திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். மேலும் அவரது திறமைக்கு தீனிபோடும் கேரக்டர்களையும் யாரும் கொடுக்கவில்லை” என வருத்தப்பட்டுள்ளார் இயக்குனர் பிளஸ்சி.