பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தை ஹிந்தி ரசிகர்களையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப உருவாக்கி வருகிறார்கள்.
அதனால், தான் சாஹோ படத்தில் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்பட ஐந்து பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஆனால் இந்த நட்சத்திரங்களால் படக்குழுவினருக்கு அவ்வப்போது சங்கடங்கள் ஏற்பட்டு வருகின்றனவாம்.
குறிப்பாக இவர்களில் சிலர் படம் குறித்த விஷயங்களை மூடி மறைக்காமல் வெளியே பரவ விடுகின்றனாராம். படத்தின் நாயகியான ஸ்ரத்தா கபூர், தான் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதுடன், பிரபாஸும் சக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என முக்கிய தகவலை சமீபத்தில் தான் போட்டுடைத்திருந்தார்.
நடிகர் நீல் நிதின் முகேஷும் இது வழக்கமான மசாலா படம் அல்ல, த்ரில்லர் அம்சங்கள் கொண்ட படம் என வெளிப்படையாக கூறி வருகிறார். இப்படி தகவல்கள் லீக்காவது படக்குழுவினருக்கு சங்கடம் தந்தாலும், பிரபாஸின் ரசிகர்கள் இதனால் குஷியாகியுள்ளார்கள் என்பதும் உண்மை.