'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல மலையாள நடிகை சனுஜா. தமிழில் ரேணிகுண்டா, நாளை நமமே, பீமா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தபோது அதே ரெயிலில் ஒரே பெட்டியில் பயணித்த குமரி மாவட்டம் வில்லுக்குறிச்சியை சேர்ந்த ஆண்டோ போஸ் என்பவர் சனுஜாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அவரிடமிருந்து தப்பிய சனுஜா சக பயணிகள் உதவியுடன் அவரை பிடித்து ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தார். ரெயில்வே போலீசார் ஆண்டோ போஸை கைது செய்தனர். அவர் மீது திருச்சூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க நடிகை சனுஜாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து சனுஜா நேற்று தனது தந்தையுடன் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு சனுஜா நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். சனுஜா நீதிமன்றம் வந்ததை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.