‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த சில நாட்களாக இணையதளம் மற்றும் சோஷியல் மீடியாக்களின் ஹாட் டாபிக்காக இருப்பது மலையாள சினிமா பாடலான 'மாணிக்ய மலராய பூவி' பாடலும் அதில் புருவங்களை உயர்த்தி இளைஞர்களின் மனதை கிறங்கடித்த ப்ரியா வாரியரும் தான். எந்தளவுக்கு இந்தப்பாடலுக்கு புகழ் கிடைத்ததோ அந்த அளவுக்கு இந்தப்பாடல் குறித்த சர்ச்சைகளும் கிளம்பின.
இருந்தாலும் இந்தபாடலுக்கு கருத்து சுதந்திரம் என்கிற அடிப்படையில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். ஆனால் முதல்வரின் இந்த செயலுக்கு மலையாள நடிகரும் இயக்குனருமான ஜாய் தாமஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் படக்குழுவினரின் கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நீங்கள், சமீபத்தில் கேரளாவில் காங்கிரஸ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட விவகாரத்தில் வாய்மூடி இருப்பது ஏன்..? ஒருவேளை குற்றவாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவு தருகிறீர்களோ” என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார் ஜாய் தாமஸ்.