ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த ஜெய்சிம்ஹா படத்தை அடுத்து தேஜா இயக்கத்தில் தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா. இந்தநிலையில், நேற்று முன்தினம் தனது தந்தை என்டிஆரின் நினைவு நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களை சந்தித்தார்.
அப்போது பாலகிருஷ்ணா கூறுகையில், எனது தந்தை என்டிஆர் புகழ் பெற்ற நடிகர் மட்டுமின்றி, ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தவர். அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இதுவரை வழங்கப்படவில்லை. பல அரசுகள் மாறியபோதும் என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கவில்லை. அதனால், என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன். அதற்காக போராடுவேன் என்று பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.