தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடித்து கடந்த சங்கராந்திக்கு வெளியான படம் ஜெய்சிம்ஹா. இந்த படத்தை அடுத்து தனது தந்தையும், பிரபல தெலுங்கு நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் இந்த படத்தை தேஜா இயக்குகிறார். இப்படத்தில் என்டிஆர் வேடத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா.
இன்னும் சிலரது வாழ்க்கை வரலாறு கதைகளிலும் நடிக்க வேண்டும் என்பது பாலகிருஷ்ணாவின் விருப்பமாக இருந்து வருகிறதாம். அந்த வகையில், 2020-ல் தனது 60வது வயதை அடையும் அவர், அப்போது ராமானுஜாச்சாரியாவாக நடிக்க உள்ளார். இதன்பிறகு ஸ்ரீ கிருஷ்ணா தேவராயா உள்ளிட்ட சிலரின் வாழ்க்கை கதையிலும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இதில் ராமானுஜாச்சாரியா திரைப்படத்தை தனது 60வது பிறந்தநாளில் தொடங்க இப்போதே திட்டமிட்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணா.