ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
இடைவெளியில்லாமல் படங்களில் நடித்துவரும் மோகன்லால், தற்போது தான் நடித்துவரும் 'ஒடியன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதை தொடர்ந்து பாலிவுட் இயக்குனர் அஜய் வர்மா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். மோகன்லால் இல்லாமலேயே இதன் படப்பிடிப்பு துவங்கி, ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் சில கெஸ்ட் ரோல்களிலும் மோகன்லால் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் என்பதுதான் ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது. அந்தவகையில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்துவரும் 'காயங்குளம் கொச்சுன்னி' என்கிற படத்தில் பிளாஸ்பேக்கில் சில நிமிடங்கம் மட்டுமே வந்துபோகும் கொள்ளையன் வேடத்தில் நடிக்கிறார். இது தனது அபிமான இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் படம் என்பதற்காகத்தான்.
அதை தொடர்ந்து 'வாரிக்குழியிலே கொலபாதகம்' என்கிற படத்தில் முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறாராம். காரணம் படத்தின் டைட்டிலுடன், அவர் ஏற்கனவே 27 வருடங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்டிருப்பதால், இதில் நடிக்கும்படி தயாரிப்பாளர் திலீஷ் போத்தன் அழைக்க, மறுக்கமுடியாமல் ஒப்புக்கொண்டுள்ளாராம் மோகன்லால் .
இதுதவிர பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் 'பிலாதிகதா' என்கிற படத்திலும் சின்னதாக ஒரு ரோலில் நடிக்கிறார் மோகன்லால். இது அவரது நண்பரும் நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜூவின் மகன் நிரஞ்சன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் நட்புக்காக நடிக்க ஒப்புக்கொண்டாராம் மோகன்லால்.