ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சித்து ஆர்.பிள்ளை. பிரபல மலையாள தயாரிப்பாளர் பி.கே.ஆர்.பிள்ளையின் மகன். 2012ம் ஆண்டு வெளிவந்த செகண்ட் ஷோ படத்தில் அறிமுகமானார். அதில் அவர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதுவரை சுமார் 20 படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படத்தில் மட்டும் ஹீரோவாக நடித்துள்ளார்.
சித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், கோவா கடற்ரையில் இறந்த நிலையில் ஒரு வாலிபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கோவா மருத்துவமனையில் இருந்த அந்த உடல் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். கடற்கரையில் இறந்து கிடந்தது தான் மலையாள நடிகர் சித்து என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
27 வயதான சித்து, கோவா சென்றது ஏன்? கடலில் குளிக்கும்போது விழுந்து இறந்தரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்துவின் மரணம் கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.