பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர்களுக்கு எப்படி அரசியலில் குதிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறதோ, அதேபோல கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கவே செய்கிறது. சடகோபன் ரமேஷ், ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் சினிமாவில் நடிக்கிறார்.
அதிலும் குறிப்பாக மலையாள படத்தில் தனது சினிமா இன்னிங்சை தொடங்க உள்ளார். சமீபத்தில் கேரளா வந்திருந்த பதானை ஒரு விழாவில் சந்தித்து பேசிய மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன், இருவரும் இணைந்து எடுத்த போட்டோவை வெளியிட்டு, “இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.. காத்திருங்கள்” என சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் பிருத்விராஜின் 'சப்தமஸ்ரீ தஸ்கரா', குஞ்சாக்கோ நடித்த 'லார்டு லிவிங்ஸ்டோன் 7000 கண்டி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.