டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கருத்து வேறுபாடு காரணமாக மலையாள நட்சத்திர தம்பதிகளான திலீப்- மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்று தனித்தனியாக ஒதுங்கியபின் இருவரும் ஒருவரைப்பற்றி இன்னொருவர் வெளியே குறைசொல்லி பேசுவதில்லை. கடந்த செப்-28ஆம் தேதி திலீப் நடித்த 'ராம்லீலா' படமும் மஞ்சு வாரியர் நடித்த 'உதாகரணம் சுஜாதா' படமும் ஒரே நாளில் தான் வெளியானது.
அப்போது கூட திலீப் படத்தை எதிர்க்கவேண்டாம் என்றுதான் கூறியிருந்தார் மஞ்சு வாரியார். இந்தநிலையில் ஒன்றுக்கொன்று போட்டியாக கருதப்பட்ட இந்த இரண்டு படங்களுமே 75 நாட்களை தாண்டி இப்போதும் கேரளாவில் ஓடிக்கொண்டு இருப்பது ஆச்சர்யமான விஷயமாக பேசப்படுகிறது.