மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
நிவின்பாலியின் 'ரிச்சி' படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெறாத நிலையில், அதன் ஒரிஜினலான கன்னட படத்தை புகழ்ந்து தள்ளி சிக்கலில் மாட்டியுள்ளார் மலையாள இயக்குனரும் நடிகருமான ரூபேஷ் பீதாம்பரன். பாவம் அந்த இயக்குனர், தெரிந்து செய்தாரோ இல்லை தெரியாமல் செய்தாரோ, அது இவ்வளவு சிக்கலை இழுத்துவிடும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும் கூட, அவரது செயலால் கடுப்பான 'ரிச்சி' பட தயாரிப்பாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக, ரிச்சி பட தயாரிப்பாளர்கள் மீது அவதூறு வழக்கு தொடரும் முடிவில் இருக்கிறாராம் ரூபேஷ் பீதாம்பரன்.