டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா, கடந்த வருடம் ஜனவரி மாதம் திடீரென மரணம் அடைந்தார். கல்பனாவிற்கு ஒரே மகள் ஸ்ரீமயி. கல்பனாவிற்குப்பின் அவரது சித்தி ஊர்வசியும், பெரியம்மா கலாரஞ்சனியும் தான் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.. இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் அப்போதே கிளம்ப, அதை ஊர்வசி மறுத்து வந்தார்..
ஆனால் தற்போது ஸ்ரீமயி தனது பெயரை ஸ்ரீசங்க்யா என மாற்றிக்கொண்டு 'குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இதுகுறித்து நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் ஸ்ரீ சங்க்யாவும் அவரது பெரியம்மா கலாரஞ்சனியும். அறிமுக இயக்குனர் சுமேஷ் லால் இயக்கும் இந்த படத்தில் நடிகர்கள் கலாபவன் சாஜனும் டினி டாமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.