தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆந்திர அரசின் திரைப்பட விருதான நந்தி விருதுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளுக்கு விருது அறிவிக்கப்பட்டடது. இதில் 2015 ஆண்டுக்கான விருது பட்டியலில் பாகுபலி படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த கலை இயக்கம், சிறந்த உடை அலங்காரம், சிறந்த சண்டை, சிறந்த இசை என 13 விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் நடித்த பிரபாசும், அனுஷ்காவும் புறக்கணிக்கப்பட்டு விட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேப்போன்று மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த மனம் படத்திற்கு போதிய விருதுகள் கிடைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதவிர இன்னும் பல படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேசமயம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் என்பதற்காகவே என்.டி.பாலகிருண்ணா நடித்த லெஜண்ட் படத்திற்கு 9 விருதுகள் வாரி வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதோடு தேர்வு குழுவில் இருந்தவரும் பாலகிருஷ்ணா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பை பெற்ற வருண் தேஜா நடித்த முகுந்தா படமும் விருதுவில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல்தான் காரணம் என்கிறார்கள். தெலுங்கு திரையுலகில் நந்தி விருது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.