ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவில் நடிகர் பசுபதிக்கென தானது படங்களில் முக்கியமான ஒரு கேரக்டரை ஒதுக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்.. பெரும்பாலும் தமிழ்-மலையாளம் இணைந்த படங்களையும் உருவாக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டும் இவர், பசுபதியை வைத்து இதற்கு முன் நம்பர் 66 மதுரா பஸ் மற்றும் வைரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் 'கிணர்' (கிணறு) என்கிற படத்தை இயக்கி வருகிறார். முந்தைய படங்களைப்போல இந்தப்படத்திலும் பசுபதியை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் எம்.ஏ.நிஷாத்..
அதுமட்டுமல்ல, ஜெயப்ரதா, அர்ச்சனா, ரேவதி என மூன்று சீனியர் நடிகைகள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு இருமொழிகளில் உருவாக்கப்பட்டு வரும் இந்தப்படம் தமிழில் 'கேணி' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. 1991ல் தளபதி படத்தில் இளையராஜா இசையில் சூப்பர்ஹிட்டான 'காட்டுக்குயிலு' பாடலை தொடர்ந்து 26 வருடங்கள் கழித்து யேசுதாசையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் ஒன்றாக இணைத்து இதில் ஒரு பாடலை பாடவைத்துள்ளார் எம்.ஏ.நிஷாத்.