தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்து பனிரெண்டு வருடங்களான பின்னும் கூட நடிகை மம்தா மோகன்தாஸுக்கான வாய்ப்புகள் எதுவும் குறைந்ததாக தெரியவில்லை. ஆனால், கடந்த மூன்று வருடங்களில் செலக்டிவாக நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ள மம்தா, இந்த வருடத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்துவிட்டார். இன்னும் மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். ஆனால் இதுபோக, தான் நடிப்பதாக இருந்த இரண்டு படங்களில் இருந்து அடுத்தடுத்து மம்தா விலகியது தான் தற்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளம், தமிழ் என இருமொழியில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகும் 'ரணம்' படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் மம்தா மோகன்தாஸ் தான். முழுக்க முழுக்க மிக்ஸிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் இந்தப்படம் எடுக்கப்பட இருக்கிறது.
ஆனால் இந்தப்படம் ஆரம்பிக்க தாமதாகவே, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மம்தாவின் தேதிகள் வீணானதால், தற்போது அவர் பஹத் பாசிலுடன் 'கார்பன்' என்கிற படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.. ஆகவே மம்தாவுக்கு பதிலாக அந்த கேரக்டரில் நடிக்க இருக்கிறார் இஷா தல்வார்..
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம்குமார் இயக்கும் 'தெய்வமே கைதொழாம் கே குமரகானம்' என்கிற படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான மம்தா தற்போது, அந்தப்படத்தில் இருந்தும் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மகேஷிண்டே பிரதிகாரம், ஒப்பம் படங்களில் நடித்த அனுஸ்ரீ நடிக்க இருக்கிறாராம்.. கால்ஷீட் பிரச்சனைகளினால் தான் மம்தா இந்த இரண்டு படங்களில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.