ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'பறவ' படமும் இந்த ஓணம் ரேசில் கலந்து கொள்வதாக முதலில் அறிவிக்கப்பட்டு தற்போது செப்-21க்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு நேற்று ரிலீசாகியுள்ளது. துல்கர் சல்மானின் நண்பரும் அவருடன் இணைந்து நான்கு படங்களில் காமெடி நடிகராக நடித்தவருமான 'பிரேமம்' புகழ் சௌபின் சாஹிர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். புறா பந்தயத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் துல்கர் தான் ஹீரோ என சொல்ல முடியாவிட்டாலும், படம் முழுவதும் வரும் வகையில் நீட்டிக்கப்பட்ட ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் துல்கர். நேற்று இந்தப்படம் வெளியாகியுள்ள நிலையில் தனது ரசிகர்களுக்கு துல்கர் சல்மான் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
“இந்தப்படம் பார்க்கும் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் தியேட்டரில் எனது காட்சிகளை படம்பிடிப்பதோ, அல்லது பாடல்கள், சண்டைக்காட்சிகளை படம்பிடிப்பதோ, மற்றும் அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதோ கூடாது” என்று கூறியுள்ளார். தவறான நோக்கத்துடன் நீங்கள் காட்சிகளை படம் பிடிக்காவிட்டாலும்கூட, அது சட்டப்படி தவறான விஷயம் என்றும் அறிவுறுத்தியுள்ளார் துல்கர் சல்மான்.