தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைவாசம் அனுபவித்துவரும் மலையாள நடிகர் திலீப்பை திரையுலகை சேர்ந்த சில இயக்குனர்களும் நடிகர்களும் சென்று சந்தித்துவிட்டு வந்தனர்.. இந்தநிலையில் சீனியர் நடிகையான கே.பி.ஏ.சி லலிதாவும் இரு தினங்களுக்கு முன் திலீப்பை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழில் நடிகர், திலகம் சிவாஜி, கமல் நடித்த 'தேவர்மகன்' மற்றும் ஆவாரம்பூ படங்களை இயக்கியவர் மறைந்த மலையாள இயக்குனர் பரதன். இவரது மனைவியும் 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவரும் தான் நடிகை' கே.பி.ஏ.சி லலிதா..
கேரளா அரசின் கீழ இயங்கிவரும் கேரள சங்கீத நாடக அகாடமியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே.பி.ஏ.சி.லலிதா., குற்றவாளியாக சிறையில் உள்ள நபரை எப்படி சந்திக்கலாம் என பல பக்கங்களில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் ஒரு நடிகராக தான் திலீப்பை சந்திக்க செல்லவில்லை என்றும், திலீப் தனது மகனை போன்றவர் என்றும் அந்த நட்பின் அடிப்படையில் தான், திலீப்பை சந்திக்க சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ள கே.பி.ஏ.சி.லலிதா, இது தனது பெர்சனல் விஷயம் என்பதால் மற்றவர்களுடைய கருத்தைப்பற்றி தான் கவலைப்பட போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
திலீப்புடனான இவரது பாசத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. திலீப்புடன் இணைந்த அவரது பல படங்களை நடித்துள்ளவர் கே.பி.ஏ.சி.லலிதா. அவரது கணவர் பரதன் மறைந்தபோது பொருளாதார சிக்கலில் சிக்கியிருந்த அவர் குடும்பத்திற்கு திலீப் தான் நிறைய உதவி செய்தார் என கே.பி.ஏ.சி.லலிதாவே பலமுறை கூறியுள்ளார்.
இவரது மகன் சித்தார்த் பரதன் கூட திலீப்பை வைத்து 'சந்திரேட்டன் எவிடயா' என்கிற படத்தை இயக்கியதன் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். கடந்த வருடம் காவ்யா மாதவனை, திலீப் திருமணம் செய்தபோது முன்னின்று வாழ்த்தி, அதை நடத்தி வைத்தவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.