பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் தான் 'என்னு நிண்டே மொய்தீன்'. இதில் மொய்தீன்-காஞ்சனமாலா என்கிற நிஜ காதலர்களின் வாழ்க்கையை படமக்கியிருந்தர்கள். அந்த இரண்டு கேரக்டர்களுக்கும் தங்களது அற்புதமான நடிப்பால் உயிர் கொடுத்திருந்தார்கள் பிரித்விராஜும், பார்வதியும். அந்த அளவுக்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்த இந்த ஜோடி, தற்போது மை ஸ்டோரி என்கிற படத்தில் இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஹாட்ரிக் அடிக்கும் விதமாக இந்த ஜோடியை மூன்றாவதாக ஒரு படத்திலும் இணைந்து நடிக்க வைக்க இருக்கிறார் மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன். ஏற்கனவே இந்தப்படத்தில் நஸ்ரியாவையும் திரும்ப அழைத்து வர இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்த செய்தி தான்.
'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் லைம்லைட்டிற்கு வந்த அஞ்சலி மேனனின் முதல் படமான மஞ்சாடிக்குறு' படத்தில் பிருத்விராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்ல, அவரது பெங்களூர் டேய்ஸ் படத்தில் பார்வதியும் நஸ்ரியா மேனனும் நடித்திருந்தனர்.. ஆக தனக்கு பழக்கமான நட்சத்திரங்களுடனேயே மீண்டும் கை கோர்த்திருக்கிறார் அஞ்சலி மேனன்..