விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கைதி எண்-150 படத்தை அடுத்து சுரேந்தர் ரெட்டி இயக்கும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்பவரின் வாழ்க்கை கதையில் உருவாகும் இந்த படத்தில் சுதந்திர போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது.
மேலும், இந்த படத்திற்காக கலை இயக்குனர் ராஜீவன் ஐதராபாத்திலுள்ள நானக்ராம்கடா என்ற ஸ்டுடியோவில் உய்யலவாடா என்ற கிராமத்தின் செட் போட்டு உருவாக்கி வருகிறார். அதேபோல் இன்னொரு இடத்தில் ஒரு கோட்டை போன்ற செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். இந்த படத்தில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் நடந்த சில சொல்லப்படாத அதிர்ச்சி தரும் சம்பவங்களும் இடம்பெறுகிறதாம்.
அந்த காட்சிகளில் விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம். அதனால், தற்போது லண்டன் சென்று விஎப்எக்ஸ் டீமுடன் விவாதித்து வருகிறாராம் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி. மேலும், இந்த படத்தில் சிரஞ்சீவி, தாடி கெட்டப்பில் தோன்றுவதால், கடந்த சில மாதங்களாக தாடி, மீசையை பெரிய அளவில் வளர்த்து வருகிறார்.