தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய வம்சாவழி குடும்பத்தைச் சேர்ந்தவரான சன்னி லியோன் கனடாவைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற நீலப்பட நடிகை. ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமும், ஹிந்தி படங்கள் மூலமும் புகழ்பெற்றவர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். சமீபத்தில் ஒரு இந்திய குழந்தையை தத்தெடுத்து பரபரப்பு கிளப்பினார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் ஒரு செல்போன் ஷோரும் திறப்பு விழாவுக்கு நேற்று வந்தார் சன்னி லியோன். நகரின் முக்கிய வீதியான எம்.ஜி.ரோட்டில் நடந்த இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். சன்னி லியோன் கொச்சி வருவது பிரமாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் கடையின் முன்னால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் சன்னி லியோனை பார்ப்பதற்கு முண்டியடித்தனர்.
ஒரே கோரசாக "வீ லவ் சன்னி" என்று தொடர்ச்சியாக கோஷமிட்டனர். இந்த திடீர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். வெளிநாட்டு காரில் வந்து இறங்கிய சன்னி லியோன் காரின் மேற்கூரையை திறந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். கேரளாவில் தனி ஒரு மனிதருக்கு இந்த அளவிற்கு சமீபத்தில் கூட்டம் கூடியதில்லை என்கிறார்கள். சன்னி லியோன் வருகையால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
"கேரள மக்களின் அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. கடவுளின் தேசத்தையும், அந்த மக்களையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது, நன்றி கேரளா" என்று டுவிட்டரில் எழுதியிருக்கிறார் சன்னி லியோன்.